பிறவி எடுப்பதே
கர்மாவை கழிக்கத்தான்
என்பதை தெரிந்து கொள்ளத்தான் ஆன்மீகம் பழகுகிறோம்
கர்மாக்கள் என்பது
நாம் உடலாலும் மனதாலும் வேதனையை அனுபவிக்கும் போது தான் தீரும் கழியும் என்பதை அறிந்து கொள்ளத்தான் ஆன்மீகம் பயிலுகிறோம்
நாம் எந்த வகையில் உடலாலும் உள்ளத்தாலும் துன்பங்களை அனுபவித்தாலும் மரண பயம் இல்லாமல் இருக்கத்தான் ஆன்மீகம் பயலுகிறோம்
எந்த வகை துன்பம் துயரம் வந்தாலும் உடலும் மனதும் பாதிப்படையும் போது மனம் சிதையாமல் உறுதியாக இருக்கத்தான் ஆன்மீகம் பயிலுகிறோம்
நாம் தைரியமாக மன உறுதியோடு வாழ்ந்து எந்த வித துன்பங்களையும் தாங்கி கர்மாவை கழிக்க அரூபமாக
இருந்து முருகர் ஈசன் ஈத்தாள் இவர்களும்
ஆத்தாள் வழி
பிரம்மா
மகாவிஷ்ணு
ருத்திரன்
மகேஸ்வரன்
சதாசிவன்
குருமார்களும்
சித்தர்கள்
ரிஷிகள்
யோகிகள்
முனிவர்களான
ஞானிகளான
ஸ்ரீ அகத்தீசர் போன்ற குருமார்களும்
ஸ்ரீ வீரபரமாத்மா ஆதி குருமார்களும்
நதக்கு அரூபமாக இருந்து பாது காப்பையும்
எமன் வந்தாலும்
ஸ்ரீ வீரபரமாத்மா அனுமதியோடு தான் நம்மிடம் வருவார் என்ற ரகசியத்தை தெரிந்து கொள்ளவும் தான் ஆன்மீகம்
பயிலுகிறோம்
மாறாக
பணம் புகழ் அதிகாரம் என்பது
நம்முடைய பூர்வ ஜென்மங்களின் புண்ணிய கர்மாக்களை பொறுத்தது அய்யா
கோவிலுக்கு போன உடனே
பணம் கொட்டு கொட்டு என்று கூரையை பிய்த்துக்கொண்டு கொட்டாது அது பூர்வ புண்ணிய கர்மாக்களை பொறுத்தது சாமி
முதலில் மேற் சொன்னவாறு
ஆன்மீகத்திற்கு அது எந்த மதமாக இருந்தாலும்
ஏன் வர வேண்டும் என்பதை மேற் சொன்ன வாறு புரிந்து கொண்டு ஆன்மீகம் பயில வேண்டும் அய்யா
சும்மா தலையும் தெரியாமல் வாலும் புரியாமல்
கூச்சல் போட்டால் நேரமும் காலமும் வீண் விரயம்.
ஆக்கம் – ஆன்மீகச் செம்மல் டாக்டர் முருகமணி, MBBS சென்னை