பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பிரதமர் ஆகர வேண்டும் என்பதற்காக விஸ்வஜோதி ஆசிரம மடாதிபதி சுந்தர வடிவேல் சுவாமிகள் அஸ்வமேத யாகம் நடத்தியுள்ளார்.
இது தொடர்பாக கொடைக்கானில் செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்த விஸ்வஜோதி ஆசிரம மடாதிபதி சுந்தர வடிவேல் சுவாமிகள், 2024 -ல் நடக்கும் லோக்சபா தேர்தலில் மீண்டும் பிரதமர் மோடி ஆட்சியை கைப்பற்ற சிறப்பு யாகம் நடத்தியுள்ளோம்.
எம்.ஜி.ஆரால் தோற்றுவிக்கப்பட்ட அ.தி.மு.க.-வை
கட்சியை வழிநடத்தும் திறமை சசிகலா, பன்னீர்செல்வத்திற்கு இல்லை. எடப்பாடி பழனிசாமிக்கு அந்த சக்தி உள்ளது.
தமிழகத்தில் பொதுமக்களுக்கு மத்திய அரசின் நலத்திட்டங்கள் நிறையவே தேவைப்படுகிறது. மாணவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என அனைத்து தரப்பினரும் முன்னேற வேண்டும் எனில் மோடியே மீண்டும் பிரதமர் ஆகவேண்டும். அதற்காகத்தான் கொடைக்கானில் அஸ்வமேத யாகம் நடத்தினோம் என்றார்.