திருவருட்செல்வர் வள்ளலார் வாழ்ந்து வழிகாட்டிய வடலூர் பெருவெளியை, ஆய்வு மையம் என்ற பெயரில் திமுக அரசு வலுக்கட்டாயமாகக் கையகப்படுத்துவதைக் கண்டித்தும், கட்டுமானப்பணிகளை நிரந்தரமாக நிறுத்தக்கோரியும் தெய்வத்தமிழ்ப் பேரவை மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பாக மே 4- ஆம் தேதி சனிக்கிழமையன்று, மாலை 03 மணியளவில் வடலூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த இருந்தது. இந்த ஆர்பாட்டத்திற்கு, காவல்துறை அனுமதி மறுத்துவிட்டது.
இந்த நிலையில், நாம் தமிழர் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் வடலூரில் நடைபெற வேண்டிய இன்றைய ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்படுகிறது எனவும், நீதிமன்றத்தில் சட்டப்போராட்டம் நடத்தி உரிய அனுமதி பெற்று மாற்று தேதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.