செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவல் 34 -வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத பணம் பரிமாற்ற வழக்கில் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டவே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, இருத அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில், செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நிறைவு பெற்றதை அடுத்து, வரும் 25 -ம் தேதி வரை நீதி மன்ற காவலை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், அமலாக்கத்துறை தொர்ந்த வழக்கில் அது தொடர்பான ஆவணங்களை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி பெற்று கொண்டார்.