தேர்தல் ஆணையம் நடுநிலையை இந்துவிட்டது என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவிக்கையில், தேர்தல் நேரத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் நச்சுப் பேச்சு கேவலமாக உள்ளது. பாஜக தோல்விக்கு அஞ்சி, மத உணர்வுகளைத் தூண்டிவிட்டுள்ளார். வெறுப்பூட்டும் பேச்சை பேசியுள்ளார். வெறுப்பும் பாகுபாடும்தான் மோடியின் உண்மையான உத்தரவாதமாகும்.
அப்படி இருக்கையில், பிரதமர் மோடியின் அப்பட்டமான வெறுப்புப் பேச்சுக்கு காதை மூடிக்கொண்டு தேர்தல் ஆணையம் உள்ளது.
எனவே, தேர்தல் ஆணையம் நடுநிலைமையை கைவிட்டுள்ளது என்றே கூற வேண்டும் என தெரிவித்துள்ளார்.