திருப்பூர் மாவட்டம் தம்பிரான் குடில் அறக்கட்டளை கோபுரம் பவுண்டேஷன் இணைந்து 600 தூய்மை பணியாளர்களுக்கு மதிய உணவுடன் உடை வழங்கும் நிகழ்வுநடைபெற்றது.
இந்நிகழ்வில் தம்பிரான் குடில் அறக்கட்டளை நிறுவனர் தலைவர் சிவவாக்கியர் குரு பரம்பரை சிவவாக்கிய ஜோதிடரும் தம்பிரான் ரிஷபானந்தர், கோபுரம் பவுண்டேஷன் நிறுவனரும் தமிழக பத்திரிகையாளர்கள் சங்கத்தின் மேற்கு மண்டல அமைப்பாளருமான)ப. கோவிந்தராஜ் இணைந்து இந்நிகழ்வை நடத்தினார்கள்.
நமது தேசத்தின் எல்லை பாதுகாப்பு ராணுவம் என்றால் நமது சுகாதாரத்தின் பாதுகாவலர்கள் நம் தூய்மை பணியாளர்கள். அவர்களை கவுரவிக்கும் விதமாக இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தம்பிரான் ரிஷபானந்தர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வடபழனியில் அவர் அலுவலகம் செயல்படும் இடத்தில் தூய்மை காவலர்கள் 200 நபர்களுக்கு மதிய உணவோடு ஆடை வழங்கி கௌரவித்தார்.
அதனைத் தொடர்ந்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அவர் அலுவலகம் அமைந்துள்ள இடத்தில் தூய்மை காவலர்களுக்கு 150 நபர்களுக்கு மதிய உணவு மற்றும் ஆடை வழங்கினார் அவர் கூறுகையில் தமிழகம் முழுவதும் இச்செவையை தொடர்ந்து நாங்கள் செயல்படுத்து வருவதாக கூறியுள்ளார்.
இந்த நிகழ்ச்சியை தந்திரன்குடில் அறக்கட்டளை நிர்வாகிகளான பொங்கலூர் முத்துரத்தினம் குடும்பத்தினர் மற்றும் சேரன் காலனி வெங்கடாசலம் குடும்பத்தினர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்நிகழ்விற்கு பங்களிப்பாகவும் உறுதுணையாகவும் நன்கொடை வழங்கிய தி இந்து நாளிதழ் நிர்வாக இயக்குனர் ரோகித் ரமேஷ், திருப்பூர் நாகராஜ் மற்றும் விஸ்வநாதன், சேலம் விஜயலட்சுமி , கபிஸ்தலம் சுவாமிநாதன், திருப்பூர் நந்தினி குடும்பத்தார் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.
இந்நிகழ்விற்கு அறக்கட்டளை நிர்வாகிகள் கும்பகோணம் குடவாசல் ஐயப்பன் கபிஸ்தலம் சாமிநாதன் சில்தார் பார்த்திபாண்டி, திருப்பூர் நிர்வாகிகள் திவ்யா, தென்னரசு, அனிதா, பாலாஜி மோட்டார்ஸ் பாலாஜி, உடுமலை ஜோதிடர் நாகராஜ், விஸ்வநாதன், டான் தர்மலிங்கம், ராக்கி புரமோஷன் ராமகிருஷ்ணன், வீரமணி, மாதவன், காளீஸ்வரி, சேலம் விஜயலட்சுமி, அஞ்சலி, கணபதி மற்றும் திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக வெட்டுப்பட்டான் குட்டை மூர்த்தி தினேஷ், நாச்சியார் பாடசாலை யுவராஜ் பிரபு மகேஸ்வரன் கலந்து குண்டு விழாவை சிறப்பித்தனர்.
இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவை ஏற்பாடு செய்த அனைவருக்கும் பொது மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.