மதுரை திருப்பரங்குன்றம் அருகே, முல்லை நகர் உள்ளது. இங்கு ஆவின் பாலக கூட்டை உடைத்து, ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள நெய் மற்றும் பால் பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள தனக்கன்குளம், முல்லை நகரில், ஆவின் பாலகம் உள்ளது. இங்கு பொது மக்களுக்கு பால் ,நெய், தேன் நெல்லிக்காய், போன்றவை விற்பனை செய்யப்படுகிறது.
இந்தநிலையில், ஆவின் பூத்தின் மேல் பகுதியை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் ஆவின் பாலத்தில் இருந்த பால் ,நெய், தேன் நெல்லிக்காய், போன்ற ரூபாய் 5000 மதிப்புள்ள பொருள்களையும், மேலும் கல்லாவில் இருந்த ரூ.2 கொள்ளடியத்துச் சென்றுள்ளனர்.
ஆவின் பால் பூத்தை கூட விட்டு வைக்காமல் திருட்டு சம்பவம் நடைபெறுவது வேதனை அளிப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.