திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதி ஆர்.கே.பேட்டை வட்டம் சந்தன வேணுகோபாலபுரம் ஊராட்சியில் 2000 ஆண்டு இந்த பகுதியில் உள்ள மலை அடிவாரத்தில் 100 பொது மக்களுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைகள் வழங்கப்பட்டது
இந்த பகுதியில் சாலை வசதி இல்லை, கால்வாய் அருகில் வீட்டுமனைகள் வழங்கப்பட்டதால் அந்த பகுதியில் கால்வாய் வசதி தாண்டி சாலை வசதி போடாததால், மின்கம்பங்கள் இல்லாததால் தண்ணீர் வசதி இல்லாததால், பொதுமக்கள் இதில் பாதி பேர் வீடுகள் கட்டவில்லை, 50க்கும் மேற்பட்டோர் வீடுகள் கட்டியுள்ளனர்,
அவர்களுக்கு மின் இணைப்பு ஒரு சிலருக்கு கொடுக்கப்பட்டு ஒரு சிலருக்கு மின் இணைப்பு வழங்கவில்லை
இந்த பகுதியில் தண்ணீர் குடி தண்ணீரும் வழங்கவில்லை, ஆகையால் பொதுமக்கள் வீடு கட்டவில்லை என்று கூறியிருந்தனர்
இந்த நிலையில், பட்டா கொடுத்து இருபது ஆண்டு ஆகிறது வீட்டு மனைகளை வீடு கட்டாததால் ரத்து செய்கிறோம் என்று ஆர்.கே. பேட்டை வட்டாட்சியர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்
என்று பெயர் பலகை வைத்து இந்த பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு எச்சரிக்கை செய்தார். அனைத்து வீட்டு மனைகளும் ரத்து செய்யப்படும் என்று அவர் எச்சரிக்கை செய்ததால் அச்சமடைந்த பொதுமக்கள்
50க்கும் மேற்பட்ட வீட்டுமனைகள் பட்டாக்கள் வைத்துள்ள பெண்கள் ஆண்கள் என அனைவரும் ஒன்று திரண்டு திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் தீபாவிடம் முறையீடு செய்தனர் மனு அளித்தனர்
வீடு கட்டி வரும் எங்களுக்கு வட்டாட்சியர் தொந்தரவு செய்கிறார் இந்த பகுதியில் எங்களுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும் பட்டா வைத்துள்ள எங்களுக்கு தண்ணீர் இணைப்பு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை வைத்தனர்
மேலும் பேருந்து வசதிகள் கூட இல்லாத எங்கள் பகுதியில் அடிப்படை வசதி செய்து தராமல் அதிகாரிகள் அலைச்சலையம் காட்டுகின்றனர்
இப்படி உள்ள பகுதியில் நாங்கள் வீடுகள் கட்டி கஷ்டப்படுகிறோம் மற்றவர்கள் வீடுகள் கட்ட முடியாமல் கஷ்டப்படுகிறார்கள் நாங்கள் அனைவரும் கூலி தொழிலாளிகள் எங்களுக்கு அதிகாரிகள் தொல்லை கொடுக்கக் கூடாது வீடு கட்டுவதற்கு எங்களுக்கு அவகாசம் வழங்குங்கள் என்று கோரிக்கை வைத்தனர்
வீடு கட்டி உள்ளவர்களை எந்த தொந்தரவும் செய்ய மாட்டோம் உங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தருகிறோம் என்று வருவாய் கோட்டாட்சியர் தீபா உறுதி அளித்தார் இதனை அடுத்து பொதுமக்கள் அந்த பகுதியில் இருந்து கலைந்து சென்றனர்.